Search This Blog

Wednesday, December 4, 2013

Beans Thuvatal

பீன்ஸ் துவட்டல் / பொரியல் : பீன்ஸ், அவரைக்காய், பயத்தங்காய் ( காராமணி ), கொத்தவரங்காய் போன்ற சில காய்கறிகளை பச்சை நிறம் மாறாமல் வேகவைத்து துவட்டல் செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இந்த காய்கறிகளை  கொண்டு பொரியல் செய்வது மிக மிக எளிதும் ஆகும்.
பீன்ஸ் துவட்டல்


தேவையான பொருட்கள் :
1/4 கிலோ                                 பீன்ஸ்
1 Tbsp                                          தேங்காய் துருவல்
1/2 Tsp ( அட்ஜஸ்ட் )              சாம்பார் பொடி
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1/4 Tsp                                          உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 Tsp                                           உளுத்தம்பருப்பு
1                                                  சிகப்பு மிளகாய் ( தேவையானால் )
1/2 Tsp                                        எண்ணெய்

செய்முறை :
அடியும் நுனியும் வெட்டி எடுத்து விடவும்.


பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.

அதில் சாம்பார் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்த காயை சேர்க்கவும்.


 மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.


காயை  எடுத்து தனியாக வைக்கவும்.


 வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை சாம்பாருடன் சேர்க்கலாம்.

 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். தேவையானால் ஒரு சிகப்பு மிளகாயையும் கிள்ளி  தாளிக்கலாம்.
இப்போது வேக வைத்த காயை சேர்க்கவும். கிளறி விடவும்.


தேங்காய் துருவலை சேர்க்கவும்.


தண்ணீர் சுண்டும் வரை கலந்து விடவும்.

பீன்ஸ் துவட்டல்

ஏற்கனவே காய் வெந்து விட்டதால் மிகுந்த நேரம் கிளறிக் கொண்டே இருக்கக் கூடாது.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.

பீன்ஸ் துவட்டல்

சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.






No comments:

Post a Comment